×

பசுவந்தனை அருகே மாயமான கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

ஓட்டப்பிடாரம், ஏப். 27: பசுவந்தனை அருகே மாயமான கல்லூரி மாணவி, அப்பகுதி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பசுவந்தனை அடுத்துள்ள வடக்கு ஆரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி மகள் மாரீஸ்வரி (19). இவர், தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாரீஸ்வரி வீட்டில் இருக்கும்போது அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதையடுத்து கடந்த 25ம் தேதி மாரீஸ்வரி வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். உறவினர் மற்றும் அவரது தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்காததால் பசுவந்தனை போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை வடக்கு ஆரைக்குளம் கிராமத்தில் உள்ள கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது அது காணாமல் போன மாரீஸ்வரி என்பது தெரியவந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pasuvandana ,
× RELATED பசுவந்தனையில் குடிநீர் திட்டப்பணிகள்...