×

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஏப். 28: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஹவில்தார் வரை தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் குழந்தைகள் 2021-2022ம் கல்வியாண்டிற்கான மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் இளங்கலை பயிலும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் www,ksb.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, விபரங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Central ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...