×

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தாம்பரம்: திருவஞ்சேரியை சேர்ந்தவர் பியூலா சார்லஸ். நில பட்டா பெயர் மாற்றம் செய்ய திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ தீபா (47), உதவியாளர் தனலட்சுமி (50) ஆகியோர்  ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை செங்கல்பட்டு பிரிவு அலுவலகத்தில் பியூலா சார்லஸ் புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸ் டிஎஸ்பி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.13 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுக்கும்படி பியூலாவை அனுப்பியுள்ளனர். விஏஓவின் உதவியாளரிடம் பணத்தை கொடுத்ததும் அவர் தீபாவிடம் கொடுத்தபோது,  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

Tags : VAO ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!