×

கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி


சென்னை: சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி திடலில் தேசிய கைத்தறி கண்காட்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. 2012ம் ஆண்டுக்கு பிறகு கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடந்து வருகிறது. கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், கோ-ஆப்டெக்ஸ் வேட்டிகள், கைலிகள், ஆர்க்கானிக் கலெக்ஷன், சட்டைகள், ஏற்றுமதி ரகங்கள் என பிரத்யேக 5 விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிற மாநில கைத்தறி நெசவாளர் சங்கங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ரகங்களை பார்வைக்கு வைத்துள்ளன. இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. விற்பனை செய்யப்படும் ரகங்களுக்கு சிறப்பு சலுகையாக 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 8.30 மணிவரை நடைபெறும். மே 1ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.

Tags : Co-optex ,Handloom ,
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்