×

திருக்காட்டுப்பள்ளி அருகே கார் மோதி பெண் பலி

திருக்காட்டுப்பள்ளி,ஏப்.26: திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (58). இவரது மனைவி மனிஷா (52). இவர் மாதா கோவில் அருகில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். தனது பேன்சி ஸ்டோரை திறக்க வரும்பொழுது அந்த பகுதி வழியாக காரை ஓட்டி வந்த திருப்பூர் அவிநாசிலிங்கம் பாளையத்தை சேர்ந்த குப்புராஜ் (27) என்பவர் மனிஷா மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மனிஷாவின் கணவர் ஆரோக்கியராஜ் தோகூர் போலீசில் புகார் செய்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thirukattupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி பூதமணியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை