கறம்பக்குடி, ஏப்.26: புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் தீத்தானிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(65), விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி முள்ளாங்குருச்சி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனது காளையையும் ஓட்டி சென்றுள்ளார். இதில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கணேசனை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு வரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். இது குறித்து இவரது மகன்கள் கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.