×

உட்கட்சி பொதுத்தேர்தல் திமுகவினர் விருப்ப மனு

மாமல்லபுரம்: திமுகவின் 15வது உட்கட்சி பொது தேர்தலில் பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகள் அளவிலான உட்கட்சி தேர்தல் கடந்த 22ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை நடத்தப்படும் என ஏற்கனவே திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, போட்டியிடுபவர்கள் தங்களது விருப்ப மனுக்களை, சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்டில் 15வது உட்கட்சி பொது தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், தொமுச செயலாளர் பொன்னுராம் ஆகியோர் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றனர். இதில், மாவட்ட பிரதிநிதி உ.முருகன் தலைமையில், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், வார்டு வாரியாக அவை தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், வட்ட பிரதிநிதி ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர். நிர்வாகிகள் நந்தகோபால், தேவேந்திரன், சீனிவாசன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...