×

தேவகோட்டையில் விவசாய கல்லூரி அமைக்க கோரிக்கை

தேவகோட்டை, ஏப்.26: தேவகோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 9வது கிளை மாநாடு தலைவர் ராசேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்கள் போஸ், சாமிநாதன், கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் புரட்சித் தம்பி வரவேற்றார். மாவட்டத் தலைவர் எழுத்தாளர் ஜீவ சிந்தன் கண்காட்சியைத் திறந்து வைத்து மாநாட்டுத் தொடக்க உரையாற்றினார். தேவகோட்டை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு விவசாயக் கல்லூரி அமைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தேவகோட்டை ஜான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வழியாக ஆனந்தா கல்லூரி வரை காலை, மாலை இருவேளைகளிலும் நகர பேருந்து சேவை ஏற்படுத்தி தர வேண்டும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கவும் ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். தேவகோட்டை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைத்துத் தரக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய கிளைத் தலைவராக போஸ் துணைத் தலைவர்களாக சாமிநாதன், கீதா கிளைச் செயலாளராக அன்பரசன், பொருளாளராக மரியஜெயபால் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags : Devakottai ,
× RELATED தேவகோட்டையில் மருத்துவ முகாம்