காங்கயம், ஏப். 26: காங்கயம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வந்த சுப்பிரமணியம் கடந்த மாதம் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், காங்கயம் தீயணைப்பு மற்றும் மீட்புபணி நிலைய அலுவலராக மணிகண்டன் பொறுப்பேற்றுள்ளார். இவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மீட்புப்பணி நிலையத்திலிருந்து இடமாறுதல் ஆகி காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு பொறுப்பேற்றுள்ளார்.