×

15 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

போடி, ஏப். 25: போடி ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடந்தன. அந்தந்த ஊராட்சிகளின் தலைவர்கள் தலைமை வகித்தனர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், ‘அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் அடிப்படையில், ஒவ்வொரு பணிகளும் துல்லியமாக நிறைவேற்றப்படும் என பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, அய்யப்பன் ஆகியோர் கூட்டங்களை ஆய்வு செய்து, கிராம சபைக் கூட்டங்கள் தொடர்பாக பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு