×

கிராமங்களின் மேம்பாட்டிற்காக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

திருப்புத்தூர், ஏப்.25: கிராமங்களின் மேம்பாட்டிற்காக கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றன என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம் துவார் ஊராட்சியில் நேற்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, துவார் ஊராட்சிமன்றத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார். கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். அமைச்சர் பெரியகருப்பன் கூட்டத்தில் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளின் மேம்பாட்டு பணிகளை முதல்வர் துரிதப்படுத்தி வருகிறார். மேலும் நோய்த்தொற்றின் காரணமாக கிராமசபை கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தது. ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் கிராம வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தேர்வு செய்து செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Tags : Minister ,KR Periyakaruppan ,
× RELATED முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை