×

காங்கிரஸ் ஐஎன்டியூசி சார்பில் பாளையில் இப்தார் நோன்பு திறப்பு

நெல்லை, ஏப்.25: பாளையில் காங்கிரஸ் ஐஎன்டியூசி சார்பில் 21வது சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஐஎன்டியூசி நெல்லை மாவட்ட தலைவர் உமாபதி சிவன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், சிறுபான்மை பிரிவு எம்ஏஎஸ் அப்துல்காதர், அமீர்கான், ஐஎன்டியூசி பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கண்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், ஜமீன் முரளிராஜா, மில்லத் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐஎன்டியூசி மாநில செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி.ராமசுப்பு, தேசிய லீக் நசீர், முன்னாள் எம்எல்ஏ ஏஎல்எஸ் லட்சுமணன், பல்சமய உரையாடல் பணிக்குழு செயலாளர் மைபா ஜேசுராஜன், எஸ்ஆர்இஎஸ் கோட்ட செயலாளர் கஜன், முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் எல்கேஎஸ் மீரான் மைதீன் ஆகியோர் பேசினர். சிறுபான்மை நல ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் முகம்மது கமாலுதீன், பாலன் ராஜா, காங்கிரஸ் மண்டல தலைவர் ஐயப்பன், ஜேம்ஸ் போர்டு, திமுக வல்லநாடு முத்து, தமஜக மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், சிறுபான்மை பிரிவு ஜாகீர் உசேன், உஸ்மான், திமுக பகுதி செயலாளர் துபை சாகுல், கவுன்சிலர்கள் லெட்சுமி உமாபதி, ராமகிருஷ்ணன், சகாய ஜூலியட் மேரி, ஐஎன்டியூசி ரூபா, அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.

Tags : Iftar ,Pali ,Congress ,INTUC ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...