×

பேராவூரணி, குருவிக்கரம்பை நூலகத்தில் உலக புத்தக தினம்

பேராவூரணி, ஏப்.25: பேராவூரணி, குருவிக்கரம்பை கிளை நூலகத்தில், உலக புத்தக தினவிழா கொண்டாடப்பட்டது. பேராவூரணியில் நடைபெற்ற விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பாட்டுப் போட்டி, கதை சொல்லுதல், புத்தகக் கண்காட்சி ஆகியவை மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை வீரர் முருகையன், இல்லம் தேடிக்கல்வி மைய தன்னார்வலர் கிருஷ்ணவேணி மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்கள் இருபது பேரும், இரண்டு புரவலர்கள் சேர்க்கப்பட்டனர்.. கிளை நூலகர் நீலவேணி சங்கர் நன்றி கூறினார். குருவிக்கரம்பை கிளை நூலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைரவன் தலைமை வகித்தார்.ஓய்வு பெற்ற ஆசிரியர் கருப்பையன் முன்னிலை வகித்தார். . புத்தக வாசிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு திருக்குறள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் கிராமத்தினர், வாசகர் வட்டத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நூலகர் வெங்கட்ரமணி நன்றி கூறினார்.

Tags : World Book Day ,Peravurani ,Kuruvikkarambai Library ,
× RELATED பேராவூரணி வாக்குச்சாவடி மையங்களில்