×

கோத்தகிரியில் காட்டுப்பன்றி தாக்கி பெண் காயம்

கோத்தகிரி, ஏப்.23: கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53). இவர், வீட்டின் அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு நேற்று சென்றார். அப்போது, அங்கு புதர் மறைவில் இருந்த காட்டுப்பன்றி திடீரென லட்சுமியை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர் மீட்டு சிகிச்சைக்காக  கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, கட்டப்பெட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் சமீப காலமாக காட்டுமாடு, பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மனிதர்களை தாக்கி வருவது அதிகரித்து வருகிறது. எனவே, மனித-விலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kotagiri ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்