×

வருசநாடு அருகே பயன்பாடில்லா சலவைக் கூடம்

வருசநாடு, ஏப். 22: வருசநாடு அருகே, சலவைக் கூடத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு ஊராட்சியில் உள்ள தர்மராஜபுரம் மூல வைகை ஆற்றுப்பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு சலவை செய்வதற்கும், குளிப்பதற்கும் புதிய சலவைக் கூடம் கட்டப்பட்டது. இங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாமல், சலவைக் கூடம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.

மேலும், சலவைத் தொட்டிகளைச் சுற்றி புதர்மண்டிக் கிடக்கிறது. தர்மராஜபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறை, ராணுவத்தில் சேருவதற்காக தின்சரி காலை, மாலை உடற்பயிற்சி செய்கின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் சலவை கூடத்தை சுத்தம் செய்து தொட்டிகளில் தண்ணீரை தேக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Varusanadu ,
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?