×

சிங்கம்புணரியில் பத்திரகாளியம்மன் கோயில் முளைப்பாரி விழா

சிங்கம்புணரி, ஏப். 22: சிங்கம்புணரி நாடார் பேட்டை பத்திரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. காளியம்மன் கோயிலில் இருந்து அடுக்கு பாரி, திரிசூலம், வீடு, என பல்வேறு வடிவங்களில் முளைப்பாரிகளை பெண்கள் சுமந்து மேலூர் ரோடு சந்திவீரன் கூடம் வழியாக ஊர்வலம் வந்து செட்டியார்கள் குளத்தை அடைந்தனர். அங்கு கும்மியடித்து, குலவையிட்டு முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உறவின்முறையாளர்கள், இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Pathirakaliamman Temple Sprouting Festival ,Singampunari ,
× RELATED போலி மதுபான ஆலையில் 3,020 லிட்டர் ஸ்பிரிட் 500 மது பாட்டில் பறிமுதல்