×

புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாகை, ஏப்.21: அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட துணைத் தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ், போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்க தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் நிறைவுரையாற்றினார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு