×

மவுண்ட் சீயோன் பள்ளிகளின் நிறுவனர் தலைவர் முதலாமாண்டு நினைவு தினம்

புதுக்கோட்டை, ஏப்.21: புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பள்ளிகளின் நிறுவன தலைவர் ஜெயபரதன் செல்லையாவின் முதலாமாண்டு நினைவு தினம் மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மவுண்ட் சீயோன் பள்ளிகளின் இணை நிறுவனர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை வகித்தார். மவுண்ட் சீயோன் இண்டர் நேஷனல் (சிபிஎஸ்சி) பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மவுண்ட் சீயோன் பள்ளிகளின் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் பிரார்த்தனை செய்தார். மவுண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன் வரவேற்று உன்னதமான செயல்களை பற்றி பகிர்ந்து கொண்டார்.

பள்ளிகளின் இணை நிறுவனர் பிளாரன்ஸ் ஜெயபரதன், தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன் ஆகியோர் நிறுவனர் தலைவர் ஜெயபரதன் செல்லையா உருவப்படத்தை திறந்து வைத்தனர். அவர் கல்வித்துறையில் ஆற்றிய சேவை குறித்த ஆவணப்படக் காணொளியும் காண்பிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள் லக்ஷ்மிபிரியா, சுந்தர், செந்தில் அருண் மற்றும் திவ்யாதேவி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் கருப்பையா சரவணன் (ஜப்பான்), சுதாரஞ்சனி (சிங்கப்பூர்) மற்றும் ராஜேஷ் ஆகியோர் பள்ளி நினைவுகளை காணொளி மூலம் பகிர்ந்துகொண்டனர்.

Tags : President ,Mount Zion Schools ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!