×

திருக்காட்டுப்பள்ளியில் தேர்தல் முன்விரோதம் வாலிபரை கத்தியால் குத்திய 6 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி ஏப்21: திருக்காட்டுப்பள்ளியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலையை சேர்ந்தவர் நாகராஜன் மகன் பாரதிராஜா (25) . இவருக்கும் சிலருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு10.30 மணி அளவில் திருச்சினம்பூண்டி இளங்காட்டுப் படுகையைச் சேர்ந்த அழகர் மகன் செந்தில்குமார் (35), ஒன்பத்துவேலியை சேர்ந்த கலியராஜ் மகன் பிரசாந்த் (27) ,நடுப்படுகை தெற்கு வாய்க்கால் கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரவீன்ராஜா (24) , பவனமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மருதுபாண்டி ( 26 ), கூடநாணல் தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிஹரசுதன் (27) , பழையஆற்காடு மேலத்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விவேக் (27) ஆகிய 6 பேரும் சேர்ந்து பாரதிராஜாவை கத்தியால் தாக்கியதில் பாரதிராஜாவிற்கு தலை,வலது கை, வலது, இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாரதிராஜா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : Thirukattupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி பூதமணியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை