×

குண்டாஸில் 2 பேர் கைது

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (26). அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (23). இருவரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொலை முயற்சி மற்றும் வீடுகளை உடைத்து திருட்டு என பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டர் முரளீதரனுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் பெரியகுளம் வடகரை போலீசார் அடைத்தனர்.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது