×

சித்திரை திருவிழாவில் மாயமான முதியவர் பிணமாக மீட்பு

மதுரை, ஏப்.20: அழகர்கோயிலுக்கு சித்திரைத் திருவிழாவிற்காக வந்து, காணாமல் போன இரு முதியவர்களில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். மற்ெறாருவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மேலயூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், இரண்டு நாட்கள் தங்கி சித்திரை திருவிழாவை பார்ப்பதற்காக, கடந்த 14ம் தேதி மாலை, குடும்பத்தினருடன் அழகர்கோயிலுக்கு வந்தார். கோயில் வளாகத்தில் தங்கியிருந்தனர். 15ம் தேதி காலையில் பார்த்த போது, பாலகிருஷ்ணனின் தந்தையான பெரியசாமி(70) காணாமல் போய் விட்டார்.

இதேபோல் தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்தவர் முத்துச்சாமி(65). சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை, இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அழகர்கோயிலுக்கு கூட்டி வந்தனர். கடந்த 14ம் தேதி, கோயிலுக்கு வந்த இவர்கள், சாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு தங்கி உள்ளனர். மறுநாள் காலையில் முத்துச்சாமியை காணவில்லை. இந்த இரண்டு வழக்கில்அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிந்து இரண்டு பேரையும் தேடினர்.இந்நிலையில் மதுரை மானகிரி அருகே உள்ள விவசாய நிலத்தில் முத்துச்சாமி இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Chittirai festival ,
× RELATED திருப்பதிசாரம் ,கிருஷ்ணன்கோவிலில்...