×

அழகர் தரிசனத்தின் போது மண்டகப்படி ஓடுகள் சரிந்தன போலீசார் உள்பட 10 பேர் காயம்

மதுரை, ஏப்.20: மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரை பொதுமக்கள் மண்டகப்படியில் தரிசனம் செய்து கொண்டிருந்த போது, ஓடுகள் சரிந்து விழுந்ததில் 4 போலீசார் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றுக்கு வந்த அழகர் விழா முடிந்த நிலையில் மீண்டும் அழகர்கோயிலுக்கு திரும்பி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சூர்யா நகரில் பொன்னுசாமி பிள்ளை மண்டகப்படியில் அழகரை பொதுமக்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த மண்டகப்படியின் மேற்கூரை ஓடுகள் சரிந்து விழுந்தன. இதில் 4 போலீசார், அழகரை சுமக்கும் 4 சீர்பாதம் தாங்கிகள் மற்றும் 2 பக்தர்கள் என 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அழகர் புறப்பட்டார். இச்சம்பவத்தால் அலங்காநல்லூர் தீயணைப்பு வாகனம் தொடர்ந்து அழகர் செல்லும் வழியில் கொண்டு செல்லப்படுகிறது. நேற்றிரவு நடந்த இந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Algarve ,
× RELATED அழகர்கோவில் வரும் பக்தர்களுக்கு...