×

நத்தம் அருகே இறந்த கோயில் காளைக்கு அஞ்சலி

நத்தம், ஏப். 20: நத்தம் அருகே பூதகுடி கிராமம், சடையம்பட்டியில்  மலையாண்டி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் காளையான சண்டியர்  புகையிலைப்பட்டி, தவசிமடை, அலங்காநல்லூர், பாலமேடு, அரளிப்பாறை, சிராவயல்  ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளது. 18 வயதான இக்காளை  திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நேற்று இறந்து போனது.

இதனால் கிராமமே  சோகத்தில் மூழ்கி போனது. பின்னர் பூதகுடி, சடையம்பட்டி மற்றும்  சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் இறந்த காளையை அலங்கரித்து சந்தனம்  தடவி, மாலை, வேஷ்டி- துண்டுகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர்  மேளதாளம் முழங்க காளையை, ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் உள்ள மந்தையில்  அடக்கம் செய்தனர்.

Tags : Natham ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா