×

மது பதுக்கி விற்றவர் கைது 600 பாட்டிகள் பறிமுதல்

அவிநாசி,ஏப்.20: அவிநாசி அருகே சேவூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல் சிறப்பு பிரிவு போலீசார் குழுவினருடன் சேவூர் அருகே கானூர்புதூர் பகுதியில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்ற கானூர்புதூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பன் மகன் சண்முகம்(45) என்பவரை கைது செய்து 600 மதுபாட்டிகளை  பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது