×

ரவுடிக்கு குண்டாஸ்

திருச்சி, ஏப்.20: திருவானைக்கோவில் ட்ரங்க் ரோட்டில் நடந்து சென்றவரிடம் கத்தி காட்டி மிரட்டி பணம் ரூ.2000 பறித்து சென்ற வழக்கில் குமார் மகன் வசந்த் (எ) கும்பக்குடி வசந்த் (23) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வசந்த் மீது கடந்த 2020ம் ஆண்டு திம்மராயசமுத்திரத்தில் கோயில் திருவிழாவின்போது ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கும், 2021ம் ஆண்டு கோயில் திருவிழாவின்போது கத்தி மற்றும் கட்டையால் ஒரு வீட்டின் கூரை, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கும் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இவரின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நேற்று வசந்த் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான ஆணையினை மத்திய சிறையில் இருந்து வரும் வசந்திடம் போலீசார் கொடுத்தனர்.

Tags : Rowdy ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...