×

கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஏப்.20: திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 7 ஆயிரத்து 850 வழங்கிட வேண்டும், சுகாதார காப்பீடு திட்டத்தில் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும், 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர துணைத் தலைவர் பொதுச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் குரு சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் முனியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...