×

ரூ.44.45 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி

திருப்பூர், ஏப் 19: திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட 23-வது வார்டுக்கு உட்பட்ட வளையங்காடு வ.உ.சி.நகரில் 1,2,3 ஆகிய வீதிகளுக்கு, 15-வது நிதிக்குழு மானியம் 2021-2022-ன் கீழ் ரூ.44.45 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்து, மறுசீரமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம், 1-வது மண்டல தலைவர் உமா மகேஷ்வரி, கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், துளசிமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் குடிநீர், சாலை, மின்விளக்கு மற்றும் சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நாள்தோறும் மேயர் தினேஷ்குமார் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், குறித்து தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Darsala ,
× RELATED ரோடு ரோலர் வாகனம் கடைகள், பைக்குகள் மீது மோதி விபத்து