×

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடி உள்பட 5 பேர் அதிரடி கைது

புதுச்சேரி, ஏப். 19:  புதுச்சேரி கோரிமேடு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வார விடுமுறை  நாட்களில் மதுக்கடைகள், பார்கள் முன்பு ரவுடிகளும், இளைஞர்களும்  பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் மதுஅருந்தி குடித்து கும்மாளம் போட்டு  ரகளையில் ஈடுபடுவதாக வடக்கு எஸ்பி பக்தவச்சலத்துக்கு புகார் வந்தது.  இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன்  மேற்பார்வையில் எஸ்ஐ கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார், கோரிமேடு இந்திரா  நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது பள்ளி அருகே  குடிபோதையில் கையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டிருந்த திலாஸ்பேட்டை  கருணாஜோதி வீதி லட்சுமணன் (20), சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரம் பூபதி  (23) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த அரிவாளை பறிமுதல்  செய்து இருவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில்  அடைத்தனர்.

 இவர்கள் 2 பேர் மீதும் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில்  உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோரிமேடு எஸ்ஐ-2 குமார் தலைமையிலான  போலீசார், இசிஆரில் உள்ள ஒரு ஒயின்ஷாப் அருகே ரோந்து சென்ற நிலையில் அங்கு  ேபாதையில் அரிவாளுடன் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்த  லாஸ்பேட்டை, புதுப்பேட் தமிழ்மணி (18), விஜயகுமார் (19) உள்ளிட்ட 3 பேரை  கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட  நிலையில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதவிர மற்ற ரவுடிகள்  குறித்த நடமாட்டத்தையும் கோரிமேடு காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து  வருகின்றனர். அவர்கள் மீது அடுத்தடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்  என்று தெரிகிறது.

Tags : Rowdy ,Pondicherry Gorimedu ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...