சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஆர்.கே.நகர் தொகுதி ஜே.ஜே.எபினேசர் பேசுகையில், ஆர்.கே.நகர் தொகுதி, பெருநகர சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட வட்டம் 36, 39, 40, 41,42, 43 மற்றும் 47ல் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க அரசு முன்வருமா என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘பழைய தெருவிளக்கு மின் கம்பங்களை மாற்றி புதிய 7 மீட்டர் உயர மின்கம்பம் அமைக்கப்படும். 1584 மீட்டர் பழுதடைந்த 2 கோர் கேபிள்கள் மாற்றி புதிய கேபிள்கள் அமைக்கும் பணி மற்றும் 188 எண்ணிக்கையில் பழுதடைந்த 4 கோர்பியூஸ் பாக்ஸ்களை மாற்றி புதியதாக பியூஸ்பாக்ஸ்களை மின்கம்பத்தில் பொருத்தவும், 528 எண்ணிக்கையில் தெருவிளக்கு மின் கம்பங்களின் சேதமடைந்த முகட்டுசுவர்களை சீரமைக்கவும் மதிப்பீட்டிற்கான அனுமதி பெற்று பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்’.