×

குலசேகரன்கோட்டை மீனாட்சி- சுந்தரேசுவரருக்கு இன்று திருக்கல்யாணம்

வாடிப்பட்டி, ஏப். 14: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில். இங்கு சித்திரை பெருவிழா கடந்த மார்ச் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மனும், சுவாமியும் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று காலை நடைபெறுகிறது. இதையாட்டி நேற்று மாலை திக்விஜயம் நடந்தது.

தாதம்பட்டி இரட்டை விநாயகர் கோயிலிலிருந்து சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனும் யானை வாகனத்தில் மழையிலும் மேளதாளத்துடன் ஊர்வலமாக வல்லபகணபதி கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு திக்விஜயம் நடந்தது. பின்னர் மாலை மாற்று உற்சவம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கல்யாணச் சீர் எடுத்து கொண்டு முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலமாக குலசேகரன் கோட்டைக்கு சென்றனர். வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினரும், குலசேகரன்கோட்டை கிராமமக்களும் செய்திருந்தனர்.

Tags : Kulasekarankottai ,Meenakshi- Sundareswarar ,
× RELATED ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர்...