×

உத்தப்புரத்தில் போலீசார் மீது தாக்குதல்

உசிலம்பட்டி, ஏப். 14: எழுமலை அருகேயுள்ளது உத்தப்புரம். இங்குள்ள தெற்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மன் கோயில் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவிழா ஊர்வலம் வரும் போது தெற்கு தெருவை சேர்ந்த சிலர் பீர் பாட்டிலை ரோட்டில் உடைத்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த ேபாலீசார் உடனே அவர்களை பிடிக்க சென்றனர். அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் ராமநாதபுரம் தனிப்பிரிவு போலீஸ் பாண்டி படுகாயமடைந்தார். மேலும் உசிலம்பட்டி தாலுகா ஸ்டேஷன் சேகர் உள்பட ஒரு சில போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்கள் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் போலீசாரை எஸ்பி பாஸ்கரன் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

Tags : Uthappuram ,
× RELATED பாலம் பிரச்சனை எதிரொலி...