×

ஈஞ்சம்பாக்கம் இசிஆர் சாலையில் வேன் - அரசு பஸ் மோதலில் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (42), லோடுவேன் டிரைவர். இவர், அப்பகுதி காய்கறி வியாபாரிகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேனில் அழைத்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் முருகேசன் (45), குமார் (43), ரமேஷ் (52) ஆகிய 3 பேரை ஏற்றிக்கொண்டு வேனில் கோயம்பேடுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து காய்கறிகளுடன் 3 பேரையும் ஏற்றிக்கொண்டு, மீண்டும் ஈஞ்சம்பாக்கத்துக்கு இசிஆர் சாலை வழியே தாமரைக்கண்ணன் வேனில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்னையில் இருந்து இசிஆர் சாலை வழியே கடலூருக்கு சென்ற அரசு பேருந்து, வேனின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் லோடுவேன் சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது.  வேனில் இருந்த டிரைவர் உள்பட 3 காய்கறி வியாபாரிகளும் வேனுக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைத்தனர். முருகேசன் உடல் நசுங்கி பலியானார். மேலும், படுகாயம் அடைந்த குமார், ரமேஷ், டிரைவர் தாமரைக்கண்ணன் ஆகியோரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பேருந்து டிரைவர் சலேந்திரன் (49) என்பவரை கைது செய்தனர்.

Tags : Inchambakkam ECR road ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...