×

துறையூரில் சுப்ரீம் மொபைல்ஸ் 82வது கிளை நாளை துவக்கம்

துறையூர், ஏப்.13: தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற செல்போன் நிறுவனமான உங்களது சுப்ரீம் மொபைல்ஸ் தனது 82வது கடையை திருச்சி மாவட்டம் துறையூரில் நாளை (ஏப்.14) துவங்க உள்ளது. சுப்ரீம் மொபைல்ஸ் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 82 கிளைகள் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இப்புதிய கிளையில் அனைத்து முன்னணி பிராண்ட் மொபைல்கள், லேப்டாப்புகள், கேஜெட்கள், டெலிவிஷன் மற்றும் மொபைலுக்கு தேவையான அனைத்து ஆக்சஸரீஸ் சிறந்த முறையில் விற்பனைக்கு வர உள்ளது. சிறப்பு விழாவை முன்னிட்டு மொபைல் வாங்கும் அனைவருக்கும் டிராவல் பேக் குக்கர் மற்றும் எண்ணற்ற பரிசுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் துவக்க விழாவை முன்னிட்டு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 32 இன்ச் எல்இடி டிவி 10 ஆயிரத்திற்கு வழங்கப்பட உள்ளது. ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவருக்கும் ஸ்மார்ட் வாட்ச், ஹோம் தியேட்டர், கேமரா மொபைல் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

மேலும் ரூபாய் ஒரு லட்சம் வரை உடனடி கடன் அப்ரூவல் மற்றும் தங்களது பழைய மொபைல்கள் மற்றும் லேப்டாப்களுக்கு சிறந்த எக்சேஞ்ச் விலையில் கிடைக்கும் என மண்டல விற்பனை மேலாளர் அருள்ஜோதி, பிராந்திய விற்பனை மேலாளர் கௌதம் மற்றும் ரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் எங்களது நிறுவனமான சுப்ரீம் மொபைல்ஸ் கடையின் திறப்பு விழாவிற்கு துறையூர் மக்கள் அனைவரும் ஆதரவும் நல்லாசியும் வழங்குமாறு சுப்ரீம் மொபைல்ஸ் இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் செல்வராஜ் கேட்டுக்கொண்டனர்.

Tags : Supreme Mobiles ,Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி