×

பெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தாய்மாமன் கைது

பெரம்பலூர்,ஏப்.13: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 28 வயது மதிக்கத் தக்க ஒருவருடைய அக்காவை வேப்பந்தட்டை தாலுகா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு 22 வயதில், 17வயதில் என 2 மகள்கள் உள்ளனர். இதில் 17 வயதுடைய 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியை தாய் மாமனான தனக்கு திருமணம் செய்து கொடுக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி சிறுமியின் வீட்டிற்கு வந்த அந்த நபர் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சிறுமி சத்தம் போட்டுக்கொண்டு ஓடி வந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் அக்கா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...