×

கிருஷ்ணராயபுரம் பள்ளியில் வட்டார அளவிலான பேச்சு போட்டி

கிருஷ்ணராயபுரம், ஏப்.13: கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வட்டார அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது. போட்டியினை பள்ளித் தலைமை ஆசிரியர் வைரமூர்த்தி தொடங்கி வைத்தார்.நடுவர்களாக தமிழாசிரியர்கள் குருசாமி மற்றும் சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் கிருஷ்ணராயபுரம் வட்டார அளவிலான பள்ளிகளில் இருந்து 12 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Tags : Krishnarayapuram School ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...