×

மேல்மருவத்தூர் ஊராட்சியில் அமிர்த துளி நீர் மேலாண்மை விழிப்புணர்வு நடைபயணம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஊராட்சியில் அமிர்த் துளி நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில், கிராம சுகாதார மேன்மைக்கு ஓர் நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து, முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் செந்தில் வரவேற்றார். தொடர்ந்து அமிர்த துளி கிராம சுகாதார மேன்மை குறித்த உறுதிமொழி கிராம மக்கள் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர், ஊராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக நடந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,  தூய்மை காவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Amirtha ,
× RELATED தி.நகரில் துப்பாக்கி முனையில் ரூ.4.50...