×

ரயில்வே மேம்பாலத்தில் மோதி அந்தரந்தில் தொங்கிய டிராக்டர்: உடல் நசுங்கி லோடுமேன் பலி

கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம், வள்ளுவர் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (41). லாரி டிரைவர். நேற்று மதியம் செல்வகுமார், தனது டிராக்டரில் ரப்பீஸ் ஏற்றி கொண்டு கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் புறப்பட்டார். அவருடன் லோடுமேன் சரவணன் (35) சென்றார். கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, வேகத்தடையை கண்டதும் டிரைவர் செல்வகுமார், திடீரென பிரேக் பிடித்தார். இதில் சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது  அவர் மீது டிராக்டரின்  சக்கரம் ஏறி இறங்கியது.

இதில், சம்பவ இடத்திலேயே அவர், உடல் நசுங்கி இறந்தார். செல்வகுமார் கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மேம்பாலத்தின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. தகவலறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விபத்து நடந்த பகுதி சிட்லப்பாக்கம் போலீசாரின் எல்லையில் வருவதால், சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

Tags : Loadman ,
× RELATED திருமங்கலம் அருகே போதை தகராறில் லோடுமேன் குத்தி கொலை-நண்பர்கள் கைது