×

ஐஜி உத்தரவால் அதிரடி பொதுமக்கள் சிரமத்தை போக்க 47வது வார்டை மீண்டும் பொன்மலை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்

திருச்சி, ஏப்.11: பொதுமக்களின் சிரமத்தை போக்க மாநகராட்சி 47வது வார்டை மீண்டும் பொன்மலை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று மாநகர மேயரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகள் நான்கு கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் இணைந்திருந்தது. அதன்படி பொன்மலை கோட்டத்தில் 47வது வார்டு இணைத்திருந்தது. இந்நிலையில் தற்போது 5 கோட்டங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய 5 கோட்டத்திற்கு வார்டுகள் இணைக்கப்பட்டதில் 47வது வார்டும் இணைக்கப்பட்டது. இந்த வார்டு அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் செயல்படுகிறது. ஆனால் 47வது வார்டுக்கு உட்பட்ட பகுதியிலேயே பொன்மலை கோட்ட அலுவலகம் இயங்குகிறது. இந்நிலையில் 47வது வார்டு அரியமங்கலம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு அலுவலர் காரணமாக மக்கள் அதிக தொலைவிலுள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் 47வது வார்டினை அரியமங்கலத்தில் இருந்து விடுவித்து பொன்மலை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் 47வது வார்டு அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் மனு அளித்துள்ளார்.

Tags : IG ,47th Ward ,Ponmalai ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக...