×

பட்டுக்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி

பட்டுக்கோட்டை, ஏப்.11: இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா குருத்தோலை ஞாயிறு திருவிழா ஆகும்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கே.ஓ.என்.பாளையம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியிலிருந்து குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று புறப்பட்டு மாதா கோயில் தெரு வழியாக உலக ரட்சகர் ஆலயத்தை அடைந்தது. அதேபோல் பட்டுக்கோட்டை பழனியப்பன் தெருவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட கிறிஸ்தவர்கள் மணிக்கூண்டு, சின்னையாதெரு வழியாக மதுக்கூர்ரோடு கைகாட்டி பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை உலக மீட்பர் ஆலயத்தை அடைந்தனர்.
இந்த 2 ஊர்வலங்களிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து உலக ரட்சகர் ஆலயத்தில் மறைவட்ட அதிபரும், பங்குதந்தையுமான ஜோசப் செல்வராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது.

Tags : Palm Sunday Bhavani ,Pattukottai ,
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு