×

ஆண்டிமடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

ஆண்டிமடம்,ஏப்.11: இயேசு கிறிஸ்துவை யூதர்களின் ராஜாவாக அறிவித்து, ஜெருசலேம் நகருக்குள் குருத்தோலைகளுடன் ஊர்வலமாக அழைத்துச்சென்ற தினத்தை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை மேல்நிலைப்பள்ளி வளாக பச்சைத்தில் பங்குதந்தை பெலிக்ஸ் சாமுவேல் குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தை புனிதபடுத்தி துவக்கிவைத்தார்.
கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு ஓசான்னா கீதத்தை முழங்கியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து புனித அலங்கார அன்னை ஆலயத்தில் குருத்து ஞாயிறையொட்டி பங்கு தந்தை பெலிக்ஸ் சாமுவேல் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.அதனை தொடர்ந்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர். குருத்தோலை பவனி நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்வதர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தென்னூர் அன்னைலூர்து ஆலயத்தில் மரியநல்லூஸ்ராஜா, ஆண்டிமடம் மார்த்தினர் ஆலயத்தில் மரிய ஜொமிக்சாவியோ , பட்டன குறிச்சி லூர்துஅன்னை ஆலயத்தில் ஐ ஆல்பர்ட், கூவததூர் அந்தோணியார் ஆலயத்தில் மரியதாஸ், அகினேஸ்புரம் அகினேசம்மாள் ஆலயத்தில் ஜஸ்டின் பிராதாப், கீழ்நெடுவாய் புனித அன்னம்மாள் ஆலயத்தில் ஆல்பர்ட் புஷ்பராஜ், நெட்டலக்குறிச்சி புனித சவேரியார் ஆலயத்தில் இமானுவேல் ஆகிய பங்கு தந்தையர்கள் தலைமையில் குருத்தோலை ஞாயிறு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. சிலுவைப்பாடுகளை சுமந்து உயிர்நீத்த தினத்தை கிறிஸ்தவர்கள் வருகின்ற 15ம் தேதியை புனித வெள்ளியாக அனுசரித்து, இயேசு கிறிஸ்து 3ம் நாள் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கிறிஸ்தவர்கள் கடந்த மாதம் 2ம் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கி 40 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags : Crucifixion Sunday ,Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது