×

கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: வாலிபர் பலி

கிருஷ்ணராயபுரம்; ஏப்.11: கிருஷ்ணராயபுரம் அருகே பைக் மீதும சரக்குவாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் தீதம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேஷ்குமார் (25). இவர் நேற்று முன்தினம் காலை கரூரில் வேலைக்கு செல்வதற்காக தனது பைக்கில் திருச்சி கரூர்- தேசிய நெடுஞ்சாலையின் சாலை ஆர்.புதுக்கோட்டை வளையல்காரன்புதூர் பிரிவுரோடு அருகே சென்றார். அப்போது மாயனூர் அங்கு நகரைச் சேர்ந்த வீரண்ணன் மகன் பாண்டி என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் எந்தவித சிக்னலும் செய்யாமல் திடீரென இடதுபுறமாக திரும்பியதால் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணேஷ்குமார் பலத்த காயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது. விபத்து குறித்து கணேஷ்குமாரின் மனைவி பிரியா (24) என்பவர் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnarayapuram ,
× RELATED பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள்...