×

ராயனூர் சாலையில் கூடுதல் தெருவிளக்கு

கரூர், ஏப். 11: கரூர் தாந்தோணிமலை ராயனூர் சாலையில் கூடுதல் தெரு விளக்கு அமைக்க வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து தாந்தோணிமலைக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியில் ஏராளமான குடியிருப்புகளும், நிறுவனங்களும், இலங்கை தமிழர் முகாமும் உள்ளது. இந்த சாலையில் குறிப்பிட்ட து£ரம் வரை போதிய அளவு தெரு விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் கூடுதலாக தெரு விளக்கு அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையில் மக்கள் நலன் கருதி கூடுதலாக மின் விளக்கு வசதி கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Rayanoor Road ,
× RELATED ராயனூர் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை