×

கூட்டுறவுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து

விருதுநகர், ஏப். 9: விருதுநகர் மண்டலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத் தலைவர் மற்றும் இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 94 விற்பனையாளர்கள் மற்றும் 11 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 26.11.2020 முதல் 15.12.2020 வரை நேர்முகத் தேர்வு நடந்தது.

இந்நிலையில், 25.8.2022 அன்று நடந்த கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் பதிவாளர் கடிதத்தைச் செயல்படுத்தும் விதமாக 2020ம் ஆண்டில் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பு எண் 03/2020, நாள் 15.6.2020 ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : Co-operative Department ,
× RELATED கூட்டுறவுத்துறை மூலம் ரூ.22 ஆயிரம் கோடி...