×

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் வாழைக்கன்று நட்டு கவன ஈர்ப்பு கூட்டம்

கோவை, ஏப்.9:  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் வாழைக்கன்று நட்டு கவன ஈர்ப்பு கூட்டம் கோவை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடந்தது.

அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம். சாமிநாதன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் கோட்ட துணைத்தலைவர்கள் முருகன், தமிழரசன், கோட்ட துணை செயலாளர்கள்  ரங்கநாதன், வெள்ளியங்கிரி, கோட்ட சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ், மாவட்ட இணை செயலாளர் மாலதிராணி, வடக்கு வட்ட கிளை தலைவர் கருப்பசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Highway Road Workers Association ,Banana ,
× RELATED தொட்டியத்தில் சூறாவளி காற்றுடன் மழை; 1 லட்சம் வாழை மரங்கள் முறிந்து நாசம்