×

திருச்சுழி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி

திருச்சுழி, ஏப். 8: திருச்சுழி அருகேயுள்ள மறவர் பெருங்குடியில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெற்கு பகுதியில் 70க்கும் மேற்பட்ட காலனி வீடுகள் உள்ளன. இங்கிருந்து வரும் கழிவுநீர் ரெட்டியபட்டியிலிருந்து சுத்தமடத்திற்கு செல்லும் சாலையில் தேங்குவதால் பொதுமக்கள் அனைவரும் அதனை மிதித்தே கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து காலனி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்கள்பகுதிக்கு வாறுகால் வசதியில்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. கழிவுநீர் தேங்கும் பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் ஒருவித அரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிநீர் செல்ல வாறுவால் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....