×

தேவகோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்

தேவகோட்டை, ஏப்.8: தேவகோட்டை அருகே நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, மதுரை,திருச்சி,ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் பங்கேற்றன. இதில் 17 ஜோடி பெரிய மாடுகள்,19 ஜோடி கரிச்சான் மாடுகள்,13 ஜோடி நடு மாடுகள், 18 ஜோடி பூஞ்சிட்டு மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 10 மைல் தூரமும், நடு மாட்டிற்கு 8 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாட்டிற்கு 5 மைல் தூரமும்,கரிச்சான் மாட்டிற்கு 6 மைல் தூரமும் பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு தொகை வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் சாலையின் இருபுறமும் நின்று கண்டு களித்தனர்.

Tags : Devakottai ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்