×

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல், பணி உயர்வு ஆணை கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார்

மதுரை, ஏப். 8: மதுரை மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் மற்றும் பணி உயர்வுக்கான ஆணைகளை, கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார். மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது.

இக்கலந்தாய்வில் 91 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 26 ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் என 16 ஆசிரியர்கள் பணி உயர்வு உத்தரவுகளை பெற்றனர். மொத்தம் 42 ஆசிரியர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், ஆணைகளை வழங்கினார். கூட்டத்தில் துணை கமிஷனர் சங்கீதா. உதவி கமிஷனர் அமிர்தலிங்கம், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Commissioner ,Karthikeyan ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...