×

மாசு கட்டுப்பாடு அலுவலர் பொறுப்பேற்பு

குமாரபாளையம், ஏப்.7: குமாரபாளையம் மாசுகட்டுப்பாடு துறை சுற்றுச்சூழல் பொறியாளாராக பணியாற்றி வந்த செல்வகுமார், உதவி பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் மருத்துவ விடுப்பில் சென்றனர். இதையடுத்து நாமக்கல் சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார், குமாரபாளையம் சுற்றுச்சூழல் (பொ) பொறியாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ரவிக்குமாரும் மருத்துவ விடுப்பில் சென்றதால், மீண்டும் குமாரபாளையம் அலுவலகத்தில் அதிகாரி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கரூர் பறக்கும்படை பொறியாளர் மோகன், குமாரபாளையம் அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அவர் நேற்று குமாரபாளையம் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Control ,
× RELATED பதஞ்சலி நிறுவனத்தின் பொய் விளம்பர...