×

ஏப்.10ல் கரடிக்கல் ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரர், காளைகளுக்கு நாளை பதிவு: ஆர்டிஓ அறிவிப்பு

திருமங்கலம், ஏப். 7: கரடிக்கல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு நாளை ஏப். 8ம் தேதி கரடிக்கல் கிளை நூலகம் மற்றும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் நடைபெறும் என திருமங்கலம் ஆர்டிஓ அறிவித்துள்ளார். திருமங்கலம அருகேயுள்ள கரடிக்கல்லில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோயில் திருவிழாவையொட்டி வரும் ஏப்.10ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு நாளை 8ம் தேதி நடைபெறும் என திருமங்கலம் ஆர்டிஓ அனிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி சான்றிதழ், மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் கரடிக்கல் கிராமத்திலுள்ள கிளை நூலகத்தில் நாளை பதிவு செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு, அதன் உரிமையாளரின் புகைப்படம், உரிமையாளர் ஆதார் அடையாள அட்டை, காளைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களுடன் 8ம் தேதி கரடிக்கல் அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் பதிவு செய்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மட்டுமே பதிவுகள் நடைபெறும் என ஆர்டிஓ அறிவித்துள்ளார்.

Tags : Jallikattu ,Cowboys ,Bulls ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்