சேந்தமங்கலம், ஏப்.5: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வரும் புகார் மனுக்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் வகையில், குறை தீர்க்கும் முகாம் நடந்த, மாவட்ட எஸ்பி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மக்கள் குறைதீர்வு முகாம் நேற்று முன்தினம் எஸ்ஐ பூபதி தலைமையில் நடந்தது. அப்போது பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை கொண்டு வந்து கொடுத்தனர். மொத்தம் 16 புகார் மனுக்களை பெற்றுக் கொண்டு, உடனடியாக 11 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது.